நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன.
அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழ் நமது சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கையாக உலகளாவிய நமது நகரத்தார்களை இணைய வழியில் சென்றடைகிறது.
நாம், நம்மையும், நம் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இவ்விதழை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணம். இந்த மின்னிதழின் நோக்கமே, நமது பல்துறை நிபுணத்துவத்தை சமுகத்தில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே.
மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பணிகள், நிகழ்வுகள், என பன்முகப் பகிர்வாய் இந்த மலர் மிளிர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் பல்துறைச் செய்திகளைப் படித்து பயனுறும் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம்.
நமது வாசகர்களின் வாசிப்பை மேலும் எளிதாக்கும் வகையில் இன்றைய அறிவியல் , தொழில் நுட்பத்திற்கு ஏற்ப இந்த மொபைல் APP அறிமுகம் செய்யப்படுகிறது . இந்த செயலி மூலம் வாசகர்கள் நமது மின்னிதழ்கள் , இணையப்பதிவுகள் முதலியவற்றை எளிதாகவும் , உடனுக்குடனும் , எப்போதும் தங்கள் கைபேசியிலே அறியலாம் . செயலியானது வாசிப்பை எளிதாக்கும் விதமாக புத்தக வடிவில் படிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
எங்களது முயற்சியில் பங்கு கொண்டு, தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்..!!!
"இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என்று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
நாம் நகரத்தார்..!! ஒன்றிணைவோம் வாருங்கள்..!! இது நம்மால் நமக்காக..!!!