இந்நூல் 108 திருப்பதிகளான வைணவ திவ்யதேசங்களின் ஸ்தல வரலாற்றை விரிவாக விளக்குகிறது. ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., அவர்கள் மிக விரிவாக அநேக சிரத்தையுடன் அனைத்து கோயில்களைப் பற்றியும், கோயில் உருவான வரலாறு, கோயிலின் கலை நுணுக்கங்கள் ஆகியவைகளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
இது வைணவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களும் நமது தேச கோயில்களின் வரலாறுபற்றி தெரிந்து கொள்ளவும், மற்றும் கோயில் அமைப்பு, கட்டடக்கலை ஆகியவை பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
பக்தர்கள் இலகுவாக கோயில் தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக பழங்கால பூகோளப் பிரிவின்படி கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பர்கள் அனைவரும் இதனை அறிந்து கோயில்களை முழுமையாக தரிசனம் செய்ய நாரயணன் அருள் புரிவாராக.
Ažurirano dana
27. jul 2021.