கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர். ‘யார் அவர்கள்? அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்? மோகினித்தீவின் பிண்ணனி என்ன?’ இப்படியான கேள்விகளுக்கு பதிலே ‘மோகினித்தீவு’. கல்கியின் விறுவிறுப்பான இந்தக் குறுநாவல் ஒரு சிறுவிருந்து.
Aktualisiert am
12.09.2019
Bücher & Nachschlagewerke