விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும்.
இச் செயலியில் வவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொற்பொழிவுகளை கேட்டு மன அமைதி மற்றும் இறைவன் அருள் பெறுங்கள்.
மேலும் உங்களுக்காக ஆன்மீக செய்திகள், கடவுளர் படங்கள், மற்றும் பல சொற்பொழிவுகள் தினமும் சேர்க்கப்படுகின்றன அதனால் நீங்கள் தினமும் இறைவனை சிந்திக்க இச்செயலி உதவும்
விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரததின் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.