இக்கைப்பேசி செயலியின் வழியாக, விவசாயிகள் அரசின் அனைத்து வேளாண்மைத் திட்ட இனங்களுக்கான மானியத் திட்ட விபரங்கள், தங்களுக்கு தேவையான இடுபொருள்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள பயனாளி முன் பதிவு , பயிர் காப்பீடு குறித்த அனைத்து விபரங்கள், அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு விண்ணப்பத்தின் நிலை மற்றும் இழப்பீடு பெறும் வரை அறிந்து கொள்ளும் வசதி, அரசு, தனியர் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் உரம், விதை இருப்பு விபரங்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய விபரங்கள், தமிழ்நாட்டிலுள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலவும் விளை பொருட்களின் சந்தை விலை நிலவரங்கள், மாவட்ட வாரியான வானிலை விபரங்கள் மற்றும் சாகுபடி அறிவுரைகள், வேளாண் விரிவாக்க அலுவலர்களின் கிராம வருகை உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் உரிய நேரத்தில் பெற இயலும் .
மேலும், விவசாயிகளுக்கு வேளாண் குறித்த தகவல்கள் உடனுக்குடன் அதிவிரைவில் சென்றடைவதால் வேளாண் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த இயலும். இதன் மூலம் வேளாண்பணிகளில் ஏற்படும் வானிலை, இடுபொருள், இயந்திர தேவைகள், பருவ கால மாறுதல்கள், இயற்கை சீற்றங்கள், சந்தை விலை நிலவரங்கள், மானியம் பெறுதல் மற்றும் வேளாண் காப்பீடு போன்ற காரணிகளால் ஏற்படும் இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.
புதுப்பிக்கப்பட்டது:
8 மே, 2024