கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்ட போது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது.
அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் முருகனே குருவாக இருந்து ஞானஉபேதசத்தை உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில் அருணகிரிநாதரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இச்செயலியில் கந்தர் அலங்காரத்தின் சொற்பழிவு எளிய வடிவில் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வழியில் எளிய தமிழில் இருப்பதால் இதனை நிறுவி பயன்பெறுங்கள்.
மேலும் உங்களுக்காக ஆன்மீக செய்திகள், கடவுளர் படங்கள், மற்றும் பல சொற்பொழிவுகள் தினமும் சேர்க்கப்படுகின்றன அதனால் நீங்கள் தினமும் இறைவனை சிந்திக்க இச்செயலி உதவும்
நன்றி
Oxirgi yangilanish
17-may, 2024