பாரதி இவன் பைந்தமிழ் சாரதி. அந்த பா ரதத்தால் இந்த பாரதத்தை ஆள வந்தவன். "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவன். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவன். பெண் விடுதலைக்காக பாடுபட்டவன். மத ஒற்றுமையை வளர்த்தவன்.
இந்த ஒப்பற்ற ஈடு இணை இல்லாத புலவனைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனில், அதற்குப் பக்கங்கள் போதாது. இப்படிப் பட்ட கவிஞனின் கதைகளை நாங்கள் இங்கு தருவதில் மிகவும் பெருமைப் படுகின்றோம். நிச்சயம் இந்தக் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றோம். ஒருவேளை குறையிருப்பின், நீர் நீக்கிப் பால் கொள்ளும் அன்னம் போல் நிறை கொள்க.
இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,
1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.
5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.
தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
4 மார்., 2024