கல்கி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவர் எழுதிய தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோகினித் தீவு என்னும் இந்த நாவல் கல்கியின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. இதனை நாங்கள் உங்கள் கைப்பேசியில் படித்து மகிழும் படியாக அளித்ததற்கு பெருமை கொள்கிறோம். படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும்.
இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,
1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.
5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.
தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
20 ஜூன், 2019