ராமனின் தூதுவனாய்த் தூயவன் அனுமன்,
இலங்கையின் உட்புகுந்து அன்னை சீதையிடம்,
சூழலின் நிலைகூறிச் சீரிலான் ராவணனின்,
நகரின் அழிவை நெருப்பால் விளைத்தான்.
விளைத்தான் ராவணன் வீணான தீயசெயல்,
அழிந்ந்துதான் வீழ்ந்தான் அய்யன் ராமனிடம்,
சீதையுடன் ராமன் சீர்மிக்க அயோத்திக்கு,
மீண்டான் ஆண்டான் மக்கள் மகிழ்ந்தனர்.