இந்த ஷோவைப் பற்றி

மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும். இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.
இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.