இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள்.