அவதார புருஷர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், ஆன்மீக வாழ்க்கையின் எல்லா உயர்ந்த பரிமாணங்களையும் தமது ஆழ்ந்த அனுபவத்தில் உணர்ந்தவர். அவரது உரையாடல்களின் தொகுப்பே அமுதமொழிகள். உலகியல் துன்பங்களில் வாடும் எண்ணற்ற மனிதர்களுக்கு ஆறுதலை வழங்கி, அவர்களுக்கு அழியாத பேரின்ப அமுதத்தை அள்ளி வழங்கும் நூல் இது. இதைப் படிப்பதும் கேட்பதும் எல்லையற்ற நன்மையை அளிக்கும்.