விசாலத்தின் கணவன் இறந்தபோது உறவை ஒதுக்கிய உறவினர்கள் விசாலத்தின் மகன் குமரன் உயர் உத்தியோகத்தில் இருந்தபோது மீண்டும் உறவைப் புதுப்பிக்க வருவதும் அவர்களின் வேண்டுகோலுக்கிணங்க விசாலம் தன் மகனுடன் தன் அண்ணன் வீடு செல்வதும் அங்கு அண்ணன் மகளை விட்டுவிட்டு அங்கு கணக்கப் பிள்ளையாக இருந்த இராமையாவின் பேத்தி துங்காவை மனை முடிப்பதும், பிறகு திருமணமான ஆறுமாத காலத்தில் குமரன் விபத்தில் சிக்கி இறந்து விடுவதும் சொல்லமுடியாத துக்கத்தை துங்காவும் விசாலமும் மனத்திற்கொண்ட நேரத்தில் விசாலம் தைரியமாக துங்காவைப் படிக்க வைத்து பாங்க் ஒன்றில் வேலை பார்க்கச் செய்வதும், தன் வீட்டின் மாடியில் குடியிருக் கும் பார்வதியின் மகன் கிருபாகரன் விதவைப் பெண் துங்காவை எப்படி மணந்து கொள்கிறானா என்பதையும் நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.