இது ஆசிரியரின் இரண்டாவது நாவல். முதல் நாவல் “இந்த இரவு எப்பொழுது விடியும்?” மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. அத்தனைப் பிரதிகளையும் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் வாங்கிக்கொண்டது. அன்றைய “தி இந்து” ஆங்கில நாளிதழ் இந்த நாவலைப் பாராட்டி விமர்சனம் எழுதி இருந்தது. இவருடைய பல சிறுகதைகள் தினமணிகதிர், குங்குமம், கல்கி, கண்ணதாசன் மாத இலக்கிய இதழ் ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. “ரங்கா பிச்சை எடுக்கிறார்” என்ற சிறுகதையை கண்ணதாசன் இலக்கிய இதழ் வெளியிட்டு அதன் மீது ஒரு திறனாய்வு போட்டியை வைத்தது.