Ravi Annaswamy
- Flag inappropriate
- Show review history
மிக அற்புதமான புத்தகம், மிக மிக அற்புதமான தமிழாக்கம்! உலகவரலாற்றின் சாரத்தை உண்மையுடனும் அதே சமயம் ஊக்கம் குன்றாமல் சொல்ல எவ்வளவு ஹராரி முனைந்திருக்கிறாரோ, அதே அளவு, கருத்துண்மையும் சிதையாமல், தமிழ் நயமும் குறையாமல் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் நாகலட்சுமி அவர்கள். அபார வீச்சும், ஆழமும் நிறைந்த புத்தகத்தைக் கண்டு அசராமல், ஆட்சி செய்திருக்கிறார். இரண்டு மொழிப்பிரதிகளையும் அருகருகில் அமைத்துப்பார்த்ததில் அசந்து போனேன். வார்த்தைக்கு வார்த்தை அடிமைமொழிபெயர்க்காமல், அர்த்தத்தை உள்வாங்கி இயல்புத்தமிழில் சரளமாகவும் நல்ல ஒலியுடனும் எழுதியிருக்கிறார் நாகலட்சுமி. உதாரணங்கள்: Like it or not, we are members of a large and particularly noisy family called the great apes. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, நாம் எல்லோருமே மனிதக்குரங்குகள் என்ற ஒரு மிகப் பெரிய, மிகச் சத்தமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். "Buddha’s recommendation was to stop not only the pursuit of external achievements, but also the pursuit of inner feelings. புறச் சாதனைகளை நோக்கி ஓடுவதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளார்ந்த உணர்வுகளை நோக்கி ஓடுவதையும் நாம் நிறுத்த வேண்டும் என்பதுதான் புத்தரின் பரிந்துரையாக இருந்தது." சொல்லப்போனால், ஹராரி போல் எழுத உலகில் நூறு பேர் இருக்கலாம். நாகலட்சுமி போல் அன்புடனும் அறிவுத்திறனுடனும் எழுத தமிழில் இன்று ஐந்து பேர் இருப்பார்களா? வரவேண்டும். நன்றி சகோதரி ; நிறைய மொழி மாற்றம் செய்யுங்கள் - அது மட்டுமல்ல, மொழிபெயர்ப்பது எப்படி என்று பயிற்சிப்பட்டறை நடத்துங்கள். மொழிப்பாலங்களமைப்போருக்கு உங்கள் பாடங்களும், ஆக்கங்களும் ஆதாரமாய் அமையும்.
23 people found this review helpful