Sokkum Vili Paarvaiyiley

· Notion Press
4,7
3 рецензијe
Е-књига
454
Страница

О овој е-књизи

சொக்கும் விழிப் பார்வையிலே' ஒரு உணர்வுகளின் குவியல்… ஆழமான நட்பு , உணர்வு பூர்வமான காதல் , அழகான உறவுகளின் பாசப் பிணைப்பு என்பவற்றை எடுத்துச் சொல்லும் ஒரு நாவல்.. பல கதைகளைநான் எழுதி இருந்தாலும் எனக்கென பிரதிலிபி தளத்தில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்த முதல் கதைதான் இந்த சொக்கும் விழிப் பார்வையிலே… இந்தக் கதை புத்தக வடிவமாக வெளிவருவதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்….

பெற்றோர்கள் அற்ற இரு அண்ணண்கள் , ஒரு தங்கையின் குடும்பம். மூத்த அண்ணண் கோபக்காரனாகவும் இரண்டாவது அண்ணண் குறும்புக் காரனாகவும் இருக்கும் அந்த குடும்த்தைச் சுற்றி நடக்கும் உணர்வுப் போராட்டங்களை படம்பிடித்துக் காட்டும் நாவலாக இது அமைந்திருக்கின்றது… 

இந்தக் கதையில் காட்ட வேண்டிய உணர்வுகள் அத்தனையும் அந்தந்த கதை மாந்தர்களினூடாகவே வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.. அதை இயன்ற மட்டும் செய்திருப்பேன் என்ற நம்பிக்கை உண்டு.. எனவே இந்தக் கதை உங்களை நிஜமாகவே நடக்கும் ஒரு நிகழ்வைப் போல் தோன்றி உங்களை அதற்குள் இழுத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை…. படிப்பவர் மத்தியில் இந்த கதை நீங்க இடம் பிடிக்கும் என்பதிலும் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. 

என் எழுத்துக்கள் என் திறமையை பறைசாற்றும் என நம்பி இந்த நாவலை வெளியிடுகிறேன்‌…நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்தக் கதையோடு பயணிக்க நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்… நிச்சயமாக உங்கள் ரசனையை ஏமாற்றாத நாவலாக இது அமையும்.

இப்படிக்கு ,

அணீஸா அலி.

Оцене и рецензије

4,7
3 рецензијe

О аутору

"சொக்கும் விழிப் பார்வையிலே"..... காதலையும் சொல்லி காதலில் மோதலையும் காதலாகச் சொல்லி கசிந்துருக வைத்த இளம் எழுத்தாளர், என்னுயிர்த் தோழி அனீஸா அலிக்கு என் மனம் திறந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..... 

இது அனீஸாவின் புத்தக வடிவில் வரும் முதல் கதை.... கதை மட்டுமல்ல பெரும் கனவு.... பாடசாலை நாட்களில் கதை கிறுக்கி அதை நாங்களே ரசித்துக் கொள்வோம். என்றாவது ஒரு நாள் இந்தக் கதைகள் புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளூர இருந்தாலும் அந்த வயதில் புத்தம் ஒன்றை வெளியிடுவதற்கான அறிவோ அனுபவமோ வசதியோ இந்த சிறுவண்டுகளிடம் இருக்கவில்லை....  

ஒரு நல்ல எழுத்தாளன் முதலில் ஒரு நல்ல வாசகனாக தான் இருப்பானாம் என்று எங்கோ கேட்ட ஞாபகம்... அது உண்மை தான் போலும்... நாங்களிருவரும் பாடப்புத்தகப் பக்கங்களிடையே நாவல்களை ஒழித்து வைத்து படிப்பது தொடங்கி கதை படித்து அழுத சந்தர்ப்பங்கள் கூட உண்டு.....  

 வித்தியாசமான கதைக் கருக்களோடு கதை எழுதுவது அனீஸாவின் ப்ளஸ்... அனீஸாவின் முதல் கதையை வாசித்து குளியலறையில் கூட அந்த கதையின் நினைவிலேயே லயித்தும் இருக்கிறேன்....இன்று நினைத்தாலும் அந்த கதையின் தாக்கம் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது. சிறு வயதிலேயே அவர் கொண்ட மாறுபட்ட சிந்தனையை நினைத்து வியந்திருக்கின்றேன்….அந்த கதையும் இதே போல் புத்தக வடிவில் உங்களிடம் வர வேண்டும் எனக் காத்திருக்கிறேன்... "யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"

இப்படிக்கு உயிர்த் தோழி

சகீனா அஸீஸ்.

Оцените ову е-књигу

Јавите нам своје мишљење.

Информације о читању

Паметни телефони и таблети
Инсталирајте апликацију Google Play књиге за Android и iPad/iPhone. Аутоматски се синхронизује са налогом и омогућава вам да читате онлајн и офлајн где год да се налазите.
Лаптопови и рачунари
Можете да слушате аудио-књиге купљене на Google Play-у помоћу веб-прегледача на рачунару.
Е-читачи и други уређаји
Да бисте читали на уређајима које користе е-мастило, као што су Kobo е-читачи, треба да преузмете фајл и пренесете га на уређај. Пратите детаљна упутства из центра за помоћ да бисте пренели фајлове у подржане е-читаче.