Uthaya Nila

· Pustaka Digital Media
Электронная книга
275
Количество страниц

Об электронной книге

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பழமொழி நமக்கு எத்தனையோ நினைவலைகளைத் தோற்றுவிக்கிறது.

உதய நிலா

சிறு உலகத்தில் உதயமாகி உலவி வரும் பெண்களின் நெஞ்சில் எத்தனை எத்தனை ஆசைகள்... கனவுகள்...

எல்லாம் நிறைவேறுகிறதா?

ஆண் பெண்ணைக் காதலிப்பதும், பெண் ஆணைக் காதலிப்பதும் இயற்கை. நினைப்பது நடப்பதில்லை என்பதை இங்கு தான் புரிந்து கொள்கிறோம்.

அதற்கு உதய நிலா கதாநாயகியும் விதி விலக்கல்ல. மாமன் மகனின் காதலை நிராகரித்து சிறு வயதில் காதல் என்று அறியாமல் பழகிய பாபுவின் நினைவு மறையாமல் நிற்கும் பொழுது - அதுதான் காதல் என்று உணருகிறாள்.

மாமன் மகன் குமாரின் காதலை உணராதவளாகி மறுத்துவிட்டு கிராமத்திற்குப் போகிறாள்.

பாபு ஆற்றுடன் போய்விட்ட செய்தி கிடைத்து துடிக்கிறாள்.

ஆனால் விதி

மீண்டும் பாபுவை டாக்டராக அவள் முன் நிறுத்துகிறது. ஆனால் அடைய முடியாத நிலை.

உதய நிலாவில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள்.

மீண்டும் கதாநாயகி ஹனி குமாரை மணக்கப் போகிறாளா?

- இது வாசகர்களுக்கு எழும் கேள்வி.

இதற்கு விடையை நான் சொல்லி விட்டால் எப்படி?

வாசகர்களே! நீங்களே படித்தால்தான் “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்?” என்பது புரியும்.

படித்துப் பாருங்களேன்!

வாசகர்களாகிய உங்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- லட்சுமி ராஜரத்னம்

Об авторе

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Оцените электронную книгу

Поделитесь с нами своим мнением.

Где читать книги

Смартфоны и планшеты
Установите приложение Google Play Книги для Android или iPad/iPhone. Оно синхронизируется с вашим аккаунтом автоматически, и вы сможете читать любимые книги онлайн и офлайн где угодно.
Ноутбуки и настольные компьютеры
Слушайте аудиокниги из Google Play в веб-браузере на компьютере.
Устройства для чтения книг
Чтобы открыть книгу на таком устройстве для чтения, как Kobo, скачайте файл и добавьте его на устройство. Подробные инструкции можно найти в Справочном центре.