Vijayalakshmi Pandit

· Pustaka Digital Media
Ebook
80
Pages

About this ebook

உலகத்தில் பெண்களில் முன்னணியில் நிற்கும் மாதரசிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி ஒன்று அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. பணமோகமும், விளம்பரப்பித்தும், ஆடம்பர விருப்பமும் நிறைந்து விளங்கும் உல்லாசிகள் மேனா மினுக்கிகளுக்கு முதலிடம் கொடுக்கவில்லை; ஆடைகளை உதிர்த்துவிட்டு உடல் வெளிச்சம் போட்டு ஆடிமயக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை; சிங்காரச் சீமாட்டிகளின் பட்டியல் தயாரிக்கவில்லை. ஸ்ரீமதி எலினார் ரூஸ்வெல்டுக்கு முதல் ஸ்தானமும், ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இண்டாவது இடமும் அளிக்கப்பட்டிருந்தது அவர்கள் தேர்ந்து கொடுத்த பெயர்ப் பட்டியலிலே.

இதிலிருந்தே விஜயலக்ஷ்மி பெற்றுள்ள செல்வாக்கின், கெளரவத்தின், தன்மை நன்கு புரியும். மனிதரில் மாணிக்கம் எனப் புகழப்படும் ஜவாஹர்லால் நேருவின் தங்கை மாதர்களில் மணி என்பதில் சந்தேகமில்லை. அவளது வாழ்க்கை வரலாறு நேருவின் குடும்பக் கதையோடு இழைந்து கிடப்பது. நேரு குடும்பக் கதையோ இந்திய சரித்திரத்தோடு பின்னி வளர்ந்தது.

About the author

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.

எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.