சூரிய மண்டலத்திலேயே அறிவாற்றல் மிக்க மனித இனம், தனது ஆறாம் அறிவால் அகிலத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறது.
ஆனாலும், கடவுள் முதல் பிரபஞ்சம் வரை, விடை தெரியாத கேள்விகள் ஆயிரக்கணக்கில் மனிதனின் மூளையைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
பிரபஞ்சத்தின் அனைத்து விதமான விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகளை அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன் எங்கள் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடப் போகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் இனி மனித குலத்தின் தலை எழுத்தையே மாற்றப் போகிறது.
பல நூற்றாண்டுகளாக, ஏன் பல ஆயிரம் ஆண்டுகளாக, விடை தெரியாத ரகசியங்களை நாங்கள் வெளியிடப் போகிறோம்.
உலகில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய மாபெரும் ரகசியங்களை இனி உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வர்.
சாதாரண மனிதனையும் விஞ்ஞானம் போய் சேர வேண்டும், எல்லா மக்களும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், மிக எளிய முறையில், விஞ்ஞானத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.
நம் மனித மூளையின் ஞானக் கண்ணான மூன்றாம் கண்ணைத் திறக்க வைப்பதே ஒரு விஞ்ஞானியான எனது நோக்கம்.
மனிதனின் மூளையில் முற்றுப்பெறாமல், வெற்றிடமாய்,
கேள்விக்குறிகளோடு பதிலை நிரப்பக் காத்திருக்கும் காலியிடங்கள் எல்லாம் இனி பதிலால் நிரப்பப்பட்டு மூளை முழு நிறைவடையும்.
இனி இங்கு சொல்லப்படும் விடைகளால், உங்கள் மூளையில் ஏற்படும் ஒரு அறிவு ஒளி, உங்களை நிச்சயம் ஒரு மாறுபட்ட உலகில் பயணிக்க வைக்கும்.
நமது இந்தியாவிற்குப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுத் தரக்கூடிய ஓர் அதி அற்புதப் பொருளாதாரத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டு, இந்திய மக்கள் அனைவரின் வறுமையை, கடனை, வரியை நீக்கி; பின்னர், இதே போல், உலகம் எங்கும் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றி; உலகில் ஏழை என்ற இனமே இல்லாமல் லட்சாதிபதி, கோடீஸ்வரர், பெரும் கோடீஸ்வரர் என்ற இனம் மட்டுமே இருக்கும்படி செய்யப் போகிறது.
மேலும், இந்த உலகிலேயே, முதல் முறையாக மனித உயிரின் மாபெரும் ரகசியத்தையும் கண்டுபிடித்துள்ளோம். அந்த ரகசியம், மனித குலத்தை இறப்பிலிருந்து காத்து, இளமையுடன் மனிதர்கள் அனைவரையும் சாகா வரத்துடன் நோய் இன்றி வாழ வைக்கப் போகிறது.
நம் இந்திய மக்களின் நலன் கருதி, மருத்துவ ரீதியிலான இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பதிப்புரிமை, காப்புரிமை (Copyright, Patent) பெறப்பட்டு, பதியப்பட்டு விட்டது. மேலும், எராளமான புதிய பதிப்புரிமை, காப்புரிமை பெரும் பணிகள் தொடர்ந்து மிக வேகமாக நடந்து வருகிறது.
நம்பவே முடியாத அதிசயமாய் இருக்கிறதா என் மக்களே, சற்றே பொறுங்கள்; இத்தனை ஆண்டுகளாய் நீங்கள் பட்ட அனைத்து துன்பங்களும் மிக விரைவில் விலகி, ஒரு ஆனந்த வாழக்கையை வாழப் போகிறீர்கள்.
பிரபஞ்சத்தின் ஏராளமான கேள்விகளுக்கு சரியான விடை அறியாமல் குழம்பிக் கிடக்கும் மனித குலத்திற்கு, இந்தப் பிரபஞ்ச ரகசியங்கள், கண்டுபிடிப்புகள், ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையுடன் படிப்படியாகப் பத்தாம் அறிவையும் பெற்றுத் தந்து விடும்.
முதலில், மிக எளிய முறையில் கேள்விகளில் ஆரம்பித்து, பின்னர், பதில் சொல்லும் படியாகப் புத்தகங்கள், மக்களையும், பின்னர் விஞ்ஞான உலகையும் இந்தக் கண்டுபிடிப்புகள் சென்று அடையும்.
பல ஆயிரம் ஆண்டுத் தேடுதலை முற்றுப் பெற வைக்கத் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி என்ன வகையான உண்மைகளை, கண்டுபிடிப்புகளை எல்லாம் உங்களுக்குச் சொல்லப் போகிறது தெரியுமா?
Digital Publication and Advertising Agency alias SIJ Software Solutions is the IT Software Solutions or Consultancy based in India