ஆனால் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்க, இறங்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எப்படி அவற்றைச் செயல்படுத்தினார்கள்;
தம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் இறைக் கட்டளைகளை எப்படிப் பின்பற்றினார்கள்;
இறைவன் அருளிய வழிகாட்டுதலுக்கேற்ப தம் தோழர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளித்தார்கள்; அழைப்புப் பணியில் ஈடுபட்டபோது அவர்கள் எத்தகைய போக்கை மேற்கொண்டார்கள்.
இந்தக் கோணத்தில் திருநபி (ஸல்) அவர்களின் பெரு-வாழ்வை ஆராய்ந்து எளிய முறையில் ஒரு நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மௌலானா அபூஸலீம் அப்துல்ஹை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் வகையில் உர்தூ மொழியில் ‘ஹயாத்தே தய்யிபா’ எனும் நூலை எழுதினார். அந்த உயர்ந்த நூலின் இனிய தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு!’ இந்நூல் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.