Aravinda Amudham

· Pustaka Digital Media
E-bok
130
Sidor

Om den här e-boken

மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும். அதுவும் இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. ‘எனது வரலாற்றை உள்ளபடியே எழுத முடியாது’ என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு. இந்தச் சரிதத்தை எழுதுவதற்கு இதன் ஆசிரியருக்கு வெறும் துணிச்சல் மட்டுமா இருந்தது? ‘ஸ்ரீ அரவிந்தர் என்ற தெய்வத்தை மன ஊஞ்சலில் வைத்து அசைத்து அசைத்து அழகு பார்க்கும்’ ஆசையல்லவா வந்திருக்கிறது? அன்புள்ளத்திலிருந்து எழுந்த ஆசை அது. அந்த அன்பின் வலிமை தான் இந்த அரவிந்த அமுதத்திற்கு சுவை மட்டுமல்ல, கம்பீரமும் சேர்த்திருக்கிறது. நல்ல தூரிகை போன்ற பேனாவை வைத்திருக்கிறார் இந்த திருப்பூர் கிருஷ்ணன். நாளைக்குப் படிக்கலாம் என்று இலேசாகப் பக்கங்களைத் திருப்பினால் இவர் சமைத்துள்ள தோரண வாயிலின் நடையிலேயே நம்மை நிற்க வைத்து விடுகிறது. எந்த முக்கிய நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் கவனமாக, விழிப்புடன், பொறுப்புணர்ச்சியுடன், தக்க ஆதாரங்களுடன் ஒரு நல்ல நூலைப் படைத்துவிட்டார் இவர். படித்துக்கொண்டே போகும்போது நம்மை நிற்க வைக்கும் சில நறுக்குகள்: எல்லோரும் இதைப் படிக்கவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்கள்தான் வருங்காலத்தின் பொறுப்பாளிகள். ஆன்மிக சாம்ராஜ்யத்தில் செங்கோலோச்சும் பேரரசரான ஸ்ரீ அரவிந்தரை’ அவர்களே சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது நல்ல குடிமக்களாக வாழவேண்டும்.

Om författaren

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினமணியில் கால் நூற்றாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை முதல் பரிசு, ஆனந்த விகடன் வழங்கிய சிறுகதைக்கான முத்திரைப் பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர்.

ஹரிவம்சராய் பச்சன் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது, சுகி சுப்பிரமணியம் நூற்றாண்டு விருது, டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் விருது, சென்னை கம்பன் கழகம் மூலம் நிறுவப்பட்டுள்ள எழுத்தாளர் சிவசங்கரி படைப்பிலக்கிய விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய 'சான்றோர்' விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞான வாரிதி, தமிழ்ச் செல்வம், தெய்வத் தமிழ் மாமணி, தமிழ் நிதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர்.

இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் வழங்குபவர்.

திரு ஏ.வி.எஸ். ராஜா அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்படும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர்.

Betygsätt e-boken

Berätta vad du tycker.

Läsinformation

Smartphones och surfplattor
Installera appen Google Play Böcker för Android och iPad/iPhone. Appen synkroniseras automatiskt med ditt konto så att du kan läsa online eller offline var du än befinner dig.
Laptops och stationära datorer
Du kan lyssna på ljudböcker som du har köpt på Google Play via webbläsaren på datorn.
Läsplattor och andra enheter
Om du vill läsa boken på enheter med e-bläck, till exempel Kobo-läsplattor, måste du ladda ned en fil och överföra den till enheten. Följ anvisningarna i hjälpcentret om du vill överföra filerna till en kompatibel läsplatta.