Kavithai Kadambam: கவிதைக் கதம்பம்

· Saba Vadivelu
4,8
4 anmeldelser
E-bog
97
Sider

Om denne e-bog

 

                        கதம்ப மணம்

எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து, எழிலுருவம் பெற்றிடத் துணை நிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் .  இலக்கணம் கடந்து, இன்னோசை தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப்பெறுவதே மரபுசாராக் கவிதை யெனலாம். வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதை.  கேட்பவர் விழைந்து கேட்கும் வண்ணம்   பழகு தமிழில் சொல்லும் பாங்கே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.

               கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணை கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர்தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் பெறுகின்றனவே !

         இச்சூழல்தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத்தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்;  நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித  உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாக்களைத்தான் வார்த்துள்ளேன்.

            புறநிகழ்வுககளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே  கவிதைக் கதம்பமாய் உங்கள் கைகளில் தவழ்கிறது. மணம்வீசி உங்கள் கருத்தையும் கவரும் என நம்புகிறேன்.   

கவிதைக் கதம்பத்தின் சுகந்தத்தைச் சுவாசிப்பீர் !

கவிதைகளை வாசியுங்கள் ;

என்போன்ற எளியோர்க்கும் வசமாகும்

வண்டமிழை வாழ்த்துங்கள் !                            

 சபா வடிவேலு

திருச்சிராப்பள்ளி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                   


Bedømmelser og anmeldelser

4,8
4 anmeldelser

Om forfatteren

  

   நூலாசிரியர்:

   சபா வடிவேலு -                                                மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்  தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும்,  முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும்  பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உயர்கல்வித்  துறையில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.  தமிழ் ஆர்வலர், இலக்கியச் சுவைஞர்,   மரபுசாராக் கவிதை புனைபவர்.                                

குறள் தரும் சிந்தனைகள்     நூலின் ஆசிரியராவார்..

  இவரது  பிற எழுத்துகளை வாசிக்க :-

  இணைய தளம்      : www.sabavadivelu.com  

  இவரைத் தொடர்பு கொள்ள  : -

  மின்னஞ்சல்         : sabavadivelu@gmail.com

  கைபேசி                : 91 + 94422 06051

Bedøm denne e-bog

Fortæl os, hvad du mener.

Oplysninger om læsning

Smartphones og tablets
Installer appen Google Play Bøger til Android og iPad/iPhone. Den synkroniserer automatisk med din konto og giver dig mulighed for at læse online eller offline, uanset hvor du er.
Bærbare og stationære computere
Du kan høre lydbøger, du har købt i Google Play via browseren på din computer.
e-læsere og andre enheder
Hvis du vil læse på e-ink-enheder som f.eks. Kobo-e-læsere, skal du downloade en fil og overføre den til din enhed. Følg den detaljerede vejledning i Hjælp for at overføre filerne til understøttede e-læsere.