அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு மொழியின்படி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நான் படித்தறிந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு சிறிய புத்தகத்தை எழுத நாட்டம் கொண்டேன். அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா இப் புத்தகத்தை எழுதுவதற்கான ஹிதாயத்தையும், அறிவையும், ஆற்றலையும் கொடுத்தான். அதனைக் கொண்டு இச்சிறிய புத்தகத்தை எழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.
ஆசிரியர் பற்றி:
நூல் ஆசிரியர் ஜனாப் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகிஷா ஹூஸைனி ஆமிரி அவர்கள் தமது கிராமத்தில் இமாமாகவும், மதரஸாவை நடத்தியும் வந்தவர். இவர், பல்லாண்டுகளாக எழுத்துப்பணி ஆற்றியும் வருபவர். எழுத்துப்பணியின் தொடக்கமாக அகில இந்திய வானொலியில் நாடகங்களை எழுதினார். அவற்றில் சில ஒலிபரப்பாகியுள்ளன. பிறகு முஸ்லிம் முரசு மாத இதழில் சிறுகதை, புதுக்கவிதை, துணுக்குகள் எழுதினார். அதைத்தொடர்ந்து முழு அளவில் மார்க்க நூல்களை எழுதத்தொடங்கினார். இவர், தொழுவதற்கே பிறந்தோம், அல்லாஹ்வே போதுமானவன், அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புகள், நஃபில் தொழுகைகள், திக்ரும் துஆக்களும், இறைவனின் சிங்கம், திருக்குர்ஆனில் அறிவியல், தொழுகையும் உடல் ஆரோக்கியமும், தொடரும் நன்மைகள், போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அல்ஹம்துலில்லா