அறிவியல் மோகம் கொண்ட இக்காலத்தில், அறிவியலைக் கொண்டும் இறைவனின் உள்ளமையை நிரூபணம் செய்திருக்கிறேன். இறைவனைப் பற்றிய தெளிவை பெற விரும்பும் அனைவருக்கும் இச்சிறிய நூல் பயன்படும் என நம்புகிறேன்.
ஆசிரியர்பற்றி:
நூல் ஆசிரியர் ஜனாப் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்கள் தமது கிராமத்தில் இமாமாகவும், மதரஸாவை நடத்தியும் வந்தவர். இவர்,பல்லாண்டுகளாக எழுத்துப் பணி ஆற்றியும் வருபவர். எழுத்துப் பணியின் தொடக்கமாக அகில இந்திய வானொலியில் நாடகங்களை எழுதினார். அவற்றில் சில ஒலிபரப்பாகியுள்ளன. பிறகு முஸ்லிம் முரசு மாத இதழில் சிறுகதை, புதுக் கவிதை, துணுக்குகள் எழுதினார். அதைத் தொடர்ந்து முழு அளவில் மார்க்க நூல்களை எழுதத் தொடங்கினார். இவர், தொழுவதற்கே பிறந்தோம், அல்லாஹ்வே போதுமானவன், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள், நஃபில் தொழுகைகள், திக்ரும் துஆக்களும், இறைவனின் சிங்கம், திருக்குர்ஆனில் அறிவியல், தொழுகையும் உடல் ஆரோக்கியமும், தொடரும் நன்மைகள், அன்னையும் பிதாவும், போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!