காதலை வெளிப்படுத்த , காதலை உணர்த்த , காதலைப் புரிய வைக்க ஆகச் சிறந்த ஒரு வழி கவிதை.
காதல் கொண்ட எவரும்; கவிஞராகி விடுகிறார்; எனும் போது , கவிஞர்களால் எழுதப்படும் காதல் கவிதைகள் சிறப்பானவை.
வெறும் அபத்தம், மயக்கம் என்ற நிலைகளைத் தாண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிலை காதலுக்கு உண்டு.
அந்த நிலையை வெளிப்படுத்தும் கவிதைகளை வாசிக்கும் வாசகரின் மனதில் , எப்போதோ முகிழ்த்த காதலின் நினைவுகள் உயிர்த்தெழுவதை தடுக்க முடியாது.
அத்தகையை கவிதைகளின் தொகுப்பு தான், கவிஞர்.க.ஆனந்த் எழுதிய “நாணத்தின் மறுபக்கம்” என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள்.
இந்தக் கவிதைகள் காதல் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, காதலைக் கொண்டாடும் மனம் கொண்டவர்களுக்கும் உரித்தானவை.
வாசியுங்கள். காதலின் புனிதத்தை சுவாசியுங்கள்…