ஆனால் குழப்பவாதிகள், “ஊஹும், கூடவே கூடாது. மீலாத் கொண்டாடுவது பித்அத்” என்று கூறுவார்கள். இதற்கு இடையில் மீலாதும் வரும். பாக்கியசாலிகள், மீலாதை, மீலாத் பெருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். அதனுடைய நன்மைகளை முழுவதுமாக பெற்றுக் கொள்வார்கள். துர்பாக்கியசாலிகளான குழப்பவாதிகளோ நஷ்டப் பட்டுப் போவார்கள்.
இச்சிறிய நூல் மீலாதுந் நபி பற்றி முழுமையான தெளிவை பெற உதவும், அல்ஹம்துலில்லாஹ்!
“மீலாதுந் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கொண்டாடுவோம்” என்ற இன் நூலை எழுதி அதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளிர்க்கு முன்பு வெளியிட ஆர்வத்துடன் முனைந்த போது. ரபீஉல் அவ்வல் 4ம் தேதி (நவ்வம்பர் 2ம் தேதி 2019) சனிக்கிழமை இன்நூல் ஆசிரியர் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்களின் உடல் நிலை சரியில்லாமல் போனது. அவர் ரபீஉல் அவ்வல் 8ம் தேதி (நவ்வம்பர் 6ம் தேதி 2019) வபாஃத் ஆனார்கள். நூல் ஆசிரியர் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்களின் வசியத்திற்க்கு இணங்க அவர் முர்ஷித் ஹழரத் ரஷீதிஷாஹ் ஆமிரி கலீமீ அவர்கள் அனைத்து ஜனாஸா சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் பங்கேட்றார்கள். ஜனாஸா செல்லும் பொழுது தன் திரு தோளை நான்கு திசைகளிலும் தாங்கி சென்றார்கள். இதை தொடர்ந்து ஹழரத் ரஷீதிஷாஹ் ஆமிரி கலீமீ அவர்கள் புதுகேசாவரம் கிராமத்தில் உள்ள மஸ்ஜிதே மரியமில் ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். பின்னர் நூல் ஆசிரியர் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்கள் அவர் கிராமத்தில் உள்ள கப்ரஸ்தானில் அவர் நேசமிகு அவர் முப்பாட்டனார் ஹழரத் ஸய்யத் ஹாமித் அலீ ஹூஸைனி (ரஹமத்துல்லஹி அலைஹி) அவர்கள் அருகில் நல் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்நூலை படிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் அவர் மக்ஃபிரத்திற்காக துஆ செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு சகோதரன்,
இன்நூல் ஆசிரியரின் மகனார்,
ஸய்யத் ஜஃபர் அலீ ஹூஸைனி ஆமிரி